rtjy 266 scaled
இலங்கைசெய்திகள்

பேருந்து தொடருந்துடன் மோதி விபத்து

Share

பேருந்து தொடருந்துடன் மோதி விபத்து

களுத்துறை – வஸ்காடுவவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(29.11.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்ல பயணத்தை மேற்கொண்டபோதே பேருந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அளுத்கமவிலிருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதி குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்ததுடன், தொடருந்தும் சேதமடைந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த விபத்து காரணமாக கடலோர தொடருந்து மார்க்கத்தில் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 6933e6366e508
உலகம்செய்திகள்

கனடாவில் கார் விபத்து: யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர்...

25 69342677b4982
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 10 இலட்சம் அபராதம்!

பலாங்கொடை – பெலிஹுல்ஓயா பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை விற்பனை...

images 3 1
இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தவணை 6 மாதங்கள் இடைநிறுத்தம் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை...

images 4 1
இலங்கைசெய்திகள்

டித்வா புயல் பேரழிவு: சி.டி ஸ்கேன் உட்பட 3 பெரிய மருத்துவமனைகள் சேதம் – 100 சிறிய மருத்துவமனைகள் பாதிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் நாட்டின் மூன்று பெரிய மருத்துவமனைகளும், சுமார் 100...