ZdyhY8HZsV1B7iPde0CA 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அத்திவாரம் தோண்டும் பகுதியில் குண்டு மீட்பு!

Share

அத்திவாரம் தோண்டும் பகுதியில் குண்டு மீட்பு!

வீடு கட்டுவதற்கு அத்திவாரம் தோண்டும் பகுதியில் இருந்து வெடிக்காத குண்டு காணப்பட்டதாக வீட்டாரும் அயலவர்களும் அச்சம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்த நகர் பகுதியில் குடியிருப்பதற்கான நிரந்தர வீடு ஒன்றை அமைக்க வீட்டார் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 11ம் திகதி வீட்டுக்கான அத்திவாரம் தோண்டும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று காணப்படுவதை அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில் கிராம சேவையாளர் ஊடாக பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும் இன்றுவரை குறித்த குண்டு அகற்றப்படாமையால் வீட்டு உரிமையாளரும் அப்பகுதி மக்களும் அச்சம் வெளியிடுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முறைப்பாட்டினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட போதிலும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் கவனத்தில்கொண்டு, பாதுகாப்பான முறையில் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...