”கச்சத்தீவை மீட்பதே பா.ஜ.,வின் லட்சியம்,” என, அக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கு அருகில் ராமேஸ்வரம் உள்ளதால் அந்நாட்டு கடற்படையின் தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2017- -2018ல் இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள், படகுகளை பிரதமர் மோடி மீட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள 60 படகுகளை மீட்க பிரதமரிடம் வலியுறுத்துவோம்.
1974ல் பிரதமராக இருந்த இந்திராவின் தவறான அணுகுமுறையால் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார். தற்போது இலங்கைக்கு பயன்படாத நிலையில் கச்சத் தீவு உள்ளது.
கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம். அதை மீட்பதே தமிழக பா.ஜ., வின் லட்சியம்.என்று தெரிவித்துள்ளார்.
#India
Leave a comment