25 678e64f2f09fc
இலங்கைசெய்திகள்

மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்! வைரலாகும் காணொளி

Share

மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்! வைரலாகும் காணொளி

தொடருந்து சேவையில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்துள்ளார்.

மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இன்று(20) காலை பயணித்த தொடருந்திலேயே போக்குவரத்து அமைச்சர் பயணித்துள்ளார்.

இதன்போது, தொடருந்தில் தன்னுடன் பயணித்த பயணிகளிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

அத்துடன், அடிக்கடி இடம்பெறும் தொடருந்து தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, தொடருந்துகளில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் சுகாதார சீர்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த தொடருந்தை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து அவர் கேட்டறிந்துள்ளார்.

இதேவேளை, எந்த வித முன்னறிவித்தலும் இன்றி அவர் நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார்.

மேலும், போக்குவரத்து அமைச்சர் சாதாரண பயணியாக தொடருந்தில் பயணிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...

face book
இலங்கை

முகநூலால் சீரழிந்த வாழ்க்கை!

இந்த வருடம், கதிர்காமம் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில்...

suicide
இலங்கை

தன்னைத்தானே சுட்டு கொண்ட காவல் அதிகாரி!

பாணத்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால்...

jail sentence
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை...