இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதி உட்பட இரு கைதிகளுக்கு சிறந்த பெறுபேறு!

Share
Share

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் இரு சிறைக் கைதிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இதனை சிறைச்சாலை பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு கொழும்பு மகசின் மற்றும் வட்டரெக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்களில் 4 கைதிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இவர்களில் தமிழ் அரசியல் கைதி ஒருவரும் மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையிலுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை நற்பிரஜைகளாக சமூகத்தில் விடுவிப்பது சிறைச்சாலைகள்  திணைக்களத்தின் முக்கியமான கடமைகளில் பிரதானமானதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...