ezgif 5 706d4cd3ae
இந்தியாஇலங்கைசெய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த பீடி இலைகள் மீட்பு!!

Share

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, அபின், செம்மரக்கட்டைகள், திமிங்கலம் வாயில் இருந்து உமிழக்கூடிய அம்பர்கிரீஸ் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இதைத் தடுக்க கடலோர பொலிஸாரும், உள்ளூர் பொலிஸாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ரோந்து நடவடிக்கையின்போது, அங்கு நின்ற ஒரு லாரியை சோதனையிட்டனர். அப்போது அதில் 1 ½ டன் பீடி இலைகள் இருப்பதும், அது இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பீடி இலைகளை பறிமுதல் செய்த பொலிஸார், குறித்த கடத்தல் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கிலோ பீடி இலையின் இந்திய மதிப்பு ரூ. 500 ஆகும். இலங்கையில் ஒரு கிலோ ரூ. 3 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. அதன் காரணமாக பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இலங்கையில் இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#India

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...