கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்
இலங்கைசெய்திகள்

கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்

Share

கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த விகாரை ஒன்று மீளவும் நிறுவப்பட்டு நேற்றைய தினம்(05.08.2023) விசேட பௌத்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து மாதவன மயிலத்தமடு பகுதிக்கு விரைந்து வந்த பெரும்பான்மை இனத்தவர்களை சேர்ந்த பலருக்கு கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளும் துண்டு துண்டாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் இருக்கும் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் கால்நடைக்கலுக்காக ஒதுக்கப்பட்ட காணியாக இருக்கின்ற காரணத்தினால், பண்ணையாளர்கள் குறித்த காணி விடயம் சம்பந்தமாக தங்களது பிரச்சினைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனினும் மேல் நீதிமன்றம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றங்கள் போன்றவற்றில் தடை உத்தரவு காணப்படுகின்ற போதிலும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பெரும்பான்மை இனத்தவர்கள் புத்த விகாரை அமைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவது பெரும் சவாலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அண்மையில் மட்டக்களப்பு விஜயம் செய்த பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரது கவனத்திற்கு கொண்டு சென்றும் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம் இன்றுவரை இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக இந்த நிலை இடம்பெருமையானால் ஒரு இன முறுகளை ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பண்ணையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...