WhatsApp Image 2022 04 13 at 12.59.47 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

சில்லறைத்தனமான அரசியலை பஸில் ஆரம்பித்துள்ளார்! – ஜனாதிபதியும் துணை என்கிறார் விமல்

Share

” நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சில்லறைத்தனமான அரசியலை பஸில் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார். இதற்கு ஜனாதிபதியும் துணைபோயுள்ளார்.

எனவே, சாந்த பண்டாரவிடம் இருந்து இராஜாங்க அமைச்சு பதவி பறிக்கப்படும்வரை, நாம் பேச்சுக்கு வரமாட்டோம்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார். இது தொடர்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு.

” சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் உறுப்பினர்களை வளைத்துபோடும் சில்லறைத்தனமான அரசியலை தனது சகாக்கள் ஊடாக பஸில் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.

எமது உறுப்பினர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று பேரம் பேசுகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியுடன் எப்படி பேச்சு நடத்துவது?

உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு இளைஞர்கள் இடமளிக்கமாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள்.

எனவே, சாந்த பண்டாரவிடமிருந்து அமைச்சு பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் மட்டும்தான் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் பேச்சுக்கு தயாரில்லை. எமது பலத்தை நாம் காட்டுவோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...