Photo 1 44444 1
இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் திறப்பு! – வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தி

Share

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது பல தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் முதலாம் திகதி வரை அரசால் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  நேற்று முதல் மதுபானசாலைகளைத் திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுபானசாலைகள்  திறக்கப்பட்ட நேரம் முதல் மதுபானசாலைகள் வாயில்களில் மக்கள் கூட்டம் பெருந்திரளாக அலைமோதுகிறது.

இந்த நிலையில், மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த செயற்பாடானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு மிகப் பெரும் இடையூறாகும்.

மதுபானசாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. இதனால் தற்போது நாட்டில் மதுபான கொத்தணி உருவாகக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – என வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா எஸ் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...