பந்துல குணவர்தன
அரசியல்இலங்கைசெய்திகள்

ஸ்டாலினின் கருத்து தொடர்பில் அலட்டமாட்டோம்! – பந்துல கூறுகின்றார்

Share

“கச்சதீவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அது அவரின் தனிப்பட்ட கருத்து. இந்நிய அரசின் நிலைப்பாடு அல்ல” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, ‘இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றிருந்த நிகழ்வொன்றின்போது, இலங்கை வசமுள்ள கச்சத்தீவை மீளப்பெறுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?” என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

“ஒவ்வொரு நாட்டிலும் மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் மாறுபடலாம். உதாரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரன் வகித்தபோது, அவர் பலவிதமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இவை அரசின் நிலைப்பாடு அல்ல. அவற்றை அரசின் நிலைப்பாடாக சர்வதேசமும் ஏற்காது. அந்தவகையில் தனது தனிப்பட்ட கருத்தை தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கலாம். இது தொடர்பில் பிரதமர் மோடி எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை. இதன்மூலம் இந்தியாவின் நிலைப்பாடு மாறவில்லை என்பதை அறியமுடிகின்றது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...