law
இலங்கைசெய்திகள்

பேராதெனிய மாணவர்களுக்கு பிணை!

Share

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் 14 பேரையும் பிணையில் விடுதலை செய்ய கண்டி பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலா 15 ஆயிரம் ரொக்கப்  பிணையிலும், 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் இவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சமோத் சத்சர ஒவ்வொரு மாதமும் கொழும்பில் உள்ள குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஏனைய மாணவர்களுக்கும் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதோடு, அவற்றை மீறினால் பிணை இரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...