பல்கலைக்கழக மாணவரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கத்தி செய்யப்பட திசர அனுருத்த பண்டார கொழும்பு, முகத்துவார பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுக்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் தண்டனைச் சட்டக் கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் திசர அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment