சந்தேகநபர் இன்று வாக்குமூலம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆயிஷா படுகொலை: சந்தேகநபர் இன்று வாக்குமூலம்

Share

களுத்துறை மாவட்டம், பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

சந்தேகநபரை நேற்று பாணந்துறை பிரதான நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரியிருந்தனர்.

இந்தநிலையில், சந்தேகநபர் வாக்குமூலம் வழங்க அனுமதி கோரியதற்கமைய, மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் இன்று வாக்குமூலத்தை வழங்க நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில், சந்தேகநபரை விசேட பாதுகாப்பின்கீழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்து, நீதிவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர் சார்பில், சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை.

வழக்குப் பொருளாக, குறித்த சிறுமி கொலைசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடை, பொலிஸாரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...