ஓகஸ்ட் மாத முதியோர் கொடுப்பனவு நாளை
ஓகஸ்ட் மாதத்துக்கான பொதுசன உதவி கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் நாளையும் நாளைமறுதினமும் வழங்கப்படவுள்ளன என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இரண்டு தினங்கள் திறந்திருக்கும் நிலையில் அங்கு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவுகளை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a comment