PrathibaM2018
அரசியல்இலங்கைசெய்திகள்

படையினரை யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முயற்சி!

Share

” கலப்பு (ஐபிரிட்) நீதிமன்றம் ஊடாக, 58 படையினரை சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முயற்சித்து வருகின்றார்.”

இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார் .

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஊடாக 58 இலங்கை படையினரை சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட், 2015 ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வருகின்றார். அதனால்தான் ஓரிரு இராணுவ அதிகாரிகள் இருந்தாலும், இராணுவ மயமாக்கல் என விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

பிற நாடுகளில் இராணுவ நியமனம் இல்லையா, எதற்காக இலங்கையின் பின்னால் மட்டும் துரத்த வேண்டும்? இராணுவ மயமாக்கலால்தான் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற விம்பத்தை உருவாக்கவே இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மே 9 சம்பவம், இறுதியாக இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கேள்விகள் எழுப்படும். இராணுவத்தினரின் பெயர்களை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தப்படுகின்றது. இந்த சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும்.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் படை குறைப்பு பற்றியும் பேசப்படுகின்றது. ஆனால் அங்கு வாழும் மக்கள் அந்த நிலைப்பாட்டில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினாலும், வெளியில் புறம் பேசுகின்றன. எனவே ,உறுதியானதொரு வெளிவிவகாரக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...