speaker mahinda yapa abeywardena 700x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்! – அறிக்கை கோருகிறார் சபாநாயகர்

Share

நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து முழுமையான அறிக்கை கோர இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (06) தெரிவித்தார்.

முடியுமாக இருந்தால் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும் எனவும், முடிந்தால் அதே வாரம் அல்லது 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கவலை தெரிவித்த அவர், அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறும் கோரிக்கை விடுத்தார். இந்த சம்பவம் தொடர்பில் அக்கறை கொண்ட அனைவருக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

நாடாளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்ட நடத்துவோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் சபாநாயகரை அவசரமாக சபைக்கு வருமாறும் எதிரணி சபையில் கோரியது . அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டுமாறும் எதிரணி கோரியது.இதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து சபைக்கு வருகை தந்த சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...