speaker mahinda yapa abeywardena 700x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்! – அறிக்கை கோருகிறார் சபாநாயகர்

Share

நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து முழுமையான அறிக்கை கோர இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (06) தெரிவித்தார்.

முடியுமாக இருந்தால் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும் எனவும், முடிந்தால் அதே வாரம் அல்லது 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கவலை தெரிவித்த அவர், அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறும் கோரிக்கை விடுத்தார். இந்த சம்பவம் தொடர்பில் அக்கறை கொண்ட அனைவருக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

நாடாளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்ட நடத்துவோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் சபாநாயகரை அவசரமாக சபைக்கு வருமாறும் எதிரணி சபையில் கோரியது . அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டுமாறும் எதிரணி கோரியது.இதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து சபைக்கு வருகை தந்த சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...