speaker mahinda yapa abeywardena 700x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்! – அறிக்கை கோருகிறார் சபாநாயகர்

Share

நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து முழுமையான அறிக்கை கோர இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (06) தெரிவித்தார்.

முடியுமாக இருந்தால் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும் எனவும், முடிந்தால் அதே வாரம் அல்லது 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கவலை தெரிவித்த அவர், அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறும் கோரிக்கை விடுத்தார். இந்த சம்பவம் தொடர்பில் அக்கறை கொண்ட அனைவருக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

நாடாளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்ட நடத்துவோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் சபாநாயகரை அவசரமாக சபைக்கு வருமாறும் எதிரணி சபையில் கோரியது . அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டுமாறும் எதிரணி கோரியது.இதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து சபைக்கு வருகை தந்த சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...