ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்! – பொன்சேகா கண்டனம்

Share

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நிராயுதபாணியாக – அறவழியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டமை ஒரு நாட்டில் ஜனநாயகத்தின் தோல்விக்கு சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ அறவழியில் முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை, தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனநாயகம் செயல்படவில்லை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமைதியாக போராடியவர்கள்மீது மே 9 ஆம் திகதி வன்முறை கும்பலை ஏவிவிட்டு மஹிந்த ராஜபக்ச தாக்குதல் நடத்தினார். தற்போதைய அரசும் இதே நடைமுறையைதான் பின்பற்றுகின்றது. ” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட மாகாண வீதி அபிவிருத்திக்கு முக்கிய முன்னுரிமை: முழுமையாகப் புனரமைக்க ஆளுநர் திட்டம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைத்து, போக்குவரத்து...

15 15
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – மனோ கணேசன் இடையிலான தொலைபேசி உரையாடல்: சந்திப்பிற்கு இணக்கம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று...

14 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளின் நலன் கருதி QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க விசேட அனுமதி

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமைக்கு அப்பால், விவசாயிகளின் அறுவடை...

13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...