ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்! – பொன்சேகா கண்டனம்

Share

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நிராயுதபாணியாக – அறவழியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டமை ஒரு நாட்டில் ஜனநாயகத்தின் தோல்விக்கு சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ அறவழியில் முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை, தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனநாயகம் செயல்படவில்லை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமைதியாக போராடியவர்கள்மீது மே 9 ஆம் திகதி வன்முறை கும்பலை ஏவிவிட்டு மஹிந்த ராஜபக்ச தாக்குதல் நடத்தினார். தற்போதைய அரசும் இதே நடைமுறையைதான் பின்பற்றுகின்றது. ” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...