air
இலங்கைசெய்திகள்

விமான நிலையங்கள் மீது தாக்குதல்! – விசேட பாதுபாப்பு ஏற்பாடு

Share

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இன்று மேலதிகமாக படையினர் களமிறக்கப்பட்டு விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கிடைக்கப்பெற்ற மின்னஞ்சலைத் தொடர்ந்து குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

இத தாக்குதல் தொடர்பில் எமக்கு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. எவ்வாறிருப்பினும் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் இராணுவ இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது எனவும் அதன் மூலமே குறித்த மின்னஞ்சல் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் விசாரணையில் தெரிய வருகிறது.

இதேவேளை இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் தலிபான்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் உடனடி அவதானம் செலுத்துமாறு பொலிஸ் பிரதானிகள் அவர்களின் கீழ் உள்ள உளவு பிரிவுகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...