air
இலங்கைசெய்திகள்

விமான நிலையங்கள் மீது தாக்குதல்! – விசேட பாதுபாப்பு ஏற்பாடு

Share

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இன்று மேலதிகமாக படையினர் களமிறக்கப்பட்டு விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கிடைக்கப்பெற்ற மின்னஞ்சலைத் தொடர்ந்து குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

இத தாக்குதல் தொடர்பில் எமக்கு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. எவ்வாறிருப்பினும் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் இராணுவ இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது எனவும் அதன் மூலமே குறித்த மின்னஞ்சல் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் விசாரணையில் தெரிய வருகிறது.

இதேவேளை இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் தலிபான்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் உடனடி அவதானம் செலுத்துமாறு பொலிஸ் பிரதானிகள் அவர்களின் கீழ் உள்ள உளவு பிரிவுகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...

06 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல் 8.00 மணி முதல்...