download 8 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ATM இயந்திரம் கோாிக்கை! கையெழுத்து சேகாிப்பு!

Share

தோப்பூர் இலங்கை வங்கிக் கிளைக்கு ATM இயந்திரத்தை பொருத்தித்தருமாறு கோரி பொதுமக்களின் 5000 கையெழுத்துக்கள் சேகரிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது.

தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டனர்.

தோப்பூர் வர்த்தக சங்கம், பொதுமக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

தோப்பூரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் ATM இயந்திரம் கிடையாது.

ATM இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 15 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மூதூர் நகருக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்  செல்ல வேண்டும்.

இந்நிலையில் தோப்பூரில் BOC கிளைக்கான ATM இயந்திரத்தை பொறுத்தித்தரகோரி நாளையிலிருந்து மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் கையெழுத்து வேட்டை இடம்பெறவுள்ளது.

இவ்வாறு பெறப்படுகின்ற கையெழுத்துக்களின் பிரதிகள் அனைத்தும் தோப்பூர் இலங்கை வங்கிக்கிளை, திருகோணமலை பிராந்திய காரியாலயம், கொழும்பு தலைமை காரியாலம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

#srilankaNews

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...