4 12
இலங்கைசெய்திகள்

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

Share

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரான கிளப் வசந்த பெரேராவின் சடலமும், உயிரிழந்த மற்றையவரின் சடலமும் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (08) அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டடிருந்தது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்த பெரேராவின் உடலில் 8 தோட்டாக்கள் காணப்பட்டதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரனீத் செனவிரத்ன வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தோட்டாக்கள் அவரது தலையில் தாக்கப்பட்டதாகவும், மற்ற ஐந்து தோட்டாக்கள் மார்பு மற்றும் வயிற்றில் காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலை மற்றும் இடுப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,மற்றையவரின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பிரபல பாடகர் கே சுஜீவா தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், சுரேந்திர வசந்த பெரேராவின் மனைவி களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...