4 25
இலங்கைசெய்திகள்

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

Share

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அஸ்வெசும கொடுப்பனவு வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பெஃப்ரல் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

21ஆம் திகதிக்குப் பின்னர் அஸ்வெசும கொடுப்பனவு பெற வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு அந்தச் செய்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது வாக்காளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் மக்களின் பணத்தில் குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும், வேட்பாளர்களின் தனிப்பட்ட பணத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பல்வேறு விடயங்கள் வழங்கப்படுவதாக கூறி ஒருவர் வாக்குகளை பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...