tamilni 350 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

Share

இலங்கையில் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மறைந்துள்ள அனைத்து பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன.

டுபாய், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளின் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவற்றினை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் மறைந்திருக்கும் 3320 பாதாள உலக குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடத்தல் மூலம் பெறப்பட்ட வீடுகள், வாகனங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வலையமைப்பையும் இலங்கையில் பாதாள உலகத்தையும் கட்டுப்படுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாதாள உலக தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான பல சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் செயற்பட்டு வருகின்றன.

எதிர்வரும் நாட்களில் இந்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக தலைவர்களின் 700 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 9 சொகுசு வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தேஷ்பந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...