5 40
இலங்கைசெய்திகள்

64 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பித்த ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலை

Share

64 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பித்த ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலை

அம்பாறை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது சர்க்கரை ஆராய்ச்சி தொழிற்சாலையின் அரைக்கும் செயற்பாடுகள் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் சர்க்கரை உற்பத்தி வரலாற்றில் இது ஒரு புதிய பக்கமாக திருப்பம் என்று கூறப்படுகிறது.

1961 ஆம் ஆண்டில், அதாவது கல்ஓயா வணிக திட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சர்க்கரை தொழிற்சாலை ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலையாக நிறுவப்பட்டது.

முன்னதாக நாட்டின் முன்னணி தொழிற்சாலையாக இருந்தநிலையில், காலப்போக்கில் பழுதடைந்தது.

இதன்பிறகு 15 ஆண்டுகள் மூடப்பட்ட பிறகு தொழிற்சாலை இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தொழற்சாலையின், 51 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமும், 49 சதவீத பங்குகள் தனியார் முதலீட்டாளர்களிடமும் உள்ளன.

இந்த தொழிற்சாலை தினமும் இரண்டாயிரத்து ஐநூறு தொன் கரும்பை அரைக்கும் திறன் கொண்டது. மேலும், புதிய தொழிற்சாலை ஆண்டுக்கு ஐம்பத்து இரண்டாயிரம் மெட்ரிக் தொன் சர்க்கரையை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...