இலங்கைசெய்திகள்

மீளப் பெறுப்பட்ட டயானா கமகேவின் பிடியாணை

1 6
Share

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து முன்னிலைப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணையை மீளப் பெற உத்தரவிட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை (Diana Gamage ) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி (Thanuja Lakmali) இன்று (06.02.2025) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமை குறித்து இவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செல்லுபடியாகும் விசா இல்லாமல் தங்கியிருப்பது மற்றும் குடிவரவு மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு தவறான அறிக்கைகளை வழங்குவது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (Cid) டயானா கமகேவுக்கு எதிராக 07 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...