284789843 557232705838174 6630191702765033949 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சம்பளப் பிரச்சினையால் முன்னாள் இராணுவச் சிப்பாய் சுட்டுக்கொலை!

Share

கொழும்பு, புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சம்பளப் பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளது என அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான முன்னாள் இராணுவச் சிப்பாயே உயிரிழந்தார்.

அத்துடன், அவருடன் இருந்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்த நபர், நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பும்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

கொழும்பு – 07 பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் பணியாற்றிய அவர்களுக்கு 3 மாதங்களுக்கான சம்பளம் வழங்காமல் பணியிலிருந்து நிறுத்திய நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நட்டஈடு கோரியிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தால் அவர்களுக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு விருந்தகத்தின் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தினர் என்று நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது.

எனினும், சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என உயிரிழந்த நபரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...