11
இலங்கைசெய்திகள்

தமிழர் தலைநகரில் மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

Share

தமிழர் தலைநகரில் மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

திருகோணமலையில் (Trincomalee) 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப் படைத்தளத்தினை (Sri Lanka Army) அண்மித்த வீதியின் ஒரு பகுதியே இன்று (01) திறக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அலுவலக வீதி வழியாக 22ம் படைப்பிரிவின் இராணுவ நூதனசாலையின் வாயிலில் இருந்து உவர்மலை மத்திய வீதியினை அடையக்கூடியதான வீதியானது கடந்த மூன்று தசாப்த காலமாக பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்தது.

உவர்மலை பகுதியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 22ம் படைப்பிரிவினை அடைவதற்கு மூன்று வீதிகள் காணப்படுகிறது.

இருப்பினும் அவ் வீதிகளூடான மக்கள் போக்குவரத்தானது சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் (Jaffna) 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதியொன்று அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீற்றர்கள் தூரம் கொண்ட வீதியே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...