Murder new 444
இலங்கைசெய்திகள்

அரியாலை கொலைச் சம்பவம்! – மேலும் ஒருவர் கைது

Share

அரியாலை கொலைச் சம்பவம்! – மேலும் ஒருவர் கைது

அரியாலை – பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பஸ்தர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணுடன் தொடர்பை பேணியவர் என சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தனது, கணவன் தினமும் போதையில் வந்து தன்னை தாக்குகின்றார் எனவும், இரவு போதையில் வந்து தாக்கியபோது தான் ஆத்திரத்தில் கையில் அகப்பட்ட திருவலையால் திருப்பி தாக்கினேன் எனவும் அதனால் அவர் உயிரிழந்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பில் மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் மனைவியுடன் அவருக்கு உள்ள தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைதான் குடும்பத் தலைவரை கொலை செய்ய காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருவரும் இணைந்தே கணவரை கொலை செய்துள்ளனர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் அச்சுவேலியை சொந்த இடமாகக் கொண்ட துரைராசா செல்வக்குமார் (வயது-–32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண்ணையும், அவருடன் தொடர்பை வைத்திருந்தார் என சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய ஆணையும், யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸார் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...