GL 1 e1644248056904
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இன்று சந்திப்பு!!

Share

இந்தியாவுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கரை இன்று சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையை வலுப்படுத்துவதற்கான பொருளாதார முதலீட்டு முயற்சிகள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், மீனவர்கள் விவகாரம் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

பொருளாதார மீட்சிக்கு சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதுடன், அதிக இணைப்பின் மூலம் மக்களுடனான மக்கள் தொடர்புகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அமைச்சர் ஜெய்சங்கர், தனது டுவிட்டர் பதிவில் இன்று (07) தெரிவித்துள்ளார்.

நேற்று புதிடெல்லியை சென்றடைந்த அமைச்சர் பீரிஸ், இந்த பயணத்தின் போது, வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...