IMG 20220221 WA0045
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார் – உரும்பிராயில் சம்பவம்!!

Share

உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று இரவு 11.30 புகுந்த திருடர்கள் பல லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நிலையில் சுமார் 12 மணித்தியாலங்களுக்குள் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையிலேயே ஒருவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

உரும்பிராய் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த இருவர் கேரிஎம் மோட்டார் சைக்கிளின் மின் இணைப்பை துண்டித்து திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதுதொடர்பில் தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், சம்பவ இடத்திலிருந்த சிசிரிவி பதிவின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உடுவிலைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் கோண்டாவிலில் உள்ள காணி ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகி உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற திருட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நிலையில் தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...