8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மாகாணங்களிடையே பயணத்தடை நீக்கம்

Share

கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு தளத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளாக ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் அழைத்து செல்லப்பட வேண்டும் எனவும் சாரதி, நடத்துநர் ஆகியோர் கட்டாயம் இரண்டு தடுப்பூசிகளும் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரயில் சேவைகளும் நாளைமுதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...