8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மாகாணங்களிடையே பயணத்தடை நீக்கம்

Share

கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு தளத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளாக ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் அழைத்து செல்லப்பட வேண்டும் எனவும் சாரதி, நடத்துநர் ஆகியோர் கட்டாயம் இரண்டு தடுப்பூசிகளும் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரயில் சேவைகளும் நாளைமுதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...