Maithripala Sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

ஏப்ரல் தாக்குதல்! – மைத்திரிக்கு அழைப்பாணை

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதிமான் மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பும்படி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலத்த காயமடைந்து, கால் ஒன்று அகற்றப்பட்ட ஜேசுரான் கணேசன் மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்த நீதவான், மைத்திரிபால சிறிசேனவை வழக்கின் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டு அறிவித்தல் அனுப்புவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் கவனயீனத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 298 ஆம் சரத்தின் கீழ் அவரை வழக்கின் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டு அறிவித்தல் அனுப்புமாறு, முறைப்பாட்டாளர்கள் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அறிவித்தல் அனுப்புவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...