32 2
இலங்கைசெய்திகள்

விமான எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் !

Share

விமான எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் !

சிறிலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிராங்பேர்ட் (FRA), இன்சியான் (ICN), மெல்போர்ன் (MEL) மற்றும் சிட்னி (SYD) விமான நிலையங்களில் ஜெட் எரிபொருள் விநியோகத்திற்கான தற்போதைய ஒப்பந்தங்கள் (31.10.2024) அன்று காலாவதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இரண்டு வருட காலத்திற்கு மேற்படி விமான நிலையங்களின் பொருத்தமான ஒப்பந்ததாரர்களை தேர்ந்தெடுப்பதற்கு வரையறுக்கப்பட்ட சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்காக எட்டு விமான எரிபொருள் விநியோக நிறுவனங்கள் விலை மனுவைச் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி, அமைச்சர்கள் குழுவால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...