24 667a5e464a6d6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பு

Share

ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பு

பாரிஸ் கிளப் மற்றும் உரிய தரப்பினருடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தங்கள் நாளை (26.06.2024) கைச்சாத்திடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய (25) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நேற்று (24) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

குறிப்பாக நாடு திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு உதவிகளை வழங்கிய நட்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள், குறிப்பாக இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுடன் ஜனாதிபதி பெருமளவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இந்நிலையில், சீன அரசாங்கத்தின் தலைமைப் பாரிஸ் உதவிக் குழுக்கள் உலக சமூகத்துடனும், உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களுடனும் பெரும் எண்ணிக்கையிலான கலந்துரையாடல்களை நடாத்திய ஜனாதிபதி, நிதியமைச்சு, ஸ்ரீ மத்திய வங்கியின் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையின் நீண்ட விளக்கத்தை நேற்று அமைச்சரவையில் முன்வைத்தார்.

இதனையடுத்து இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

பாரிஸ் கிளப் மற்றும் உரிய தரப்புகளுடன் நாளைய தினம் (26) இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...