Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

காலைவாரிய பங்காளிகள் – கவலையில் மொட்டு கட்சி

Share

” பங்காளிக் கட்சிகளால்தான் மொட்டு கட்சி அரசுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டது. தற்போதைய அரசு , மொட்டு கட்சி அரசா என்ற சந்தேகம்கூட எமக்கு எழுகின்றது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிமீது நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். இதன் அடிப்படையிலேயே நாம் சகோதரர் கட்சிகள் என நம்பியவர்களுக்கும், மொட்டு கட்சி ஆதரவாளர்கள் வாக்களித்தனர். ராஜபக்ச என்ற நாமத்தால்தான் பங்காளிக்கட்சிகள் வென்றன.

ஆனால் குழப்பத்தை விளைவித்துவிட்டு வெளியேறிவிட்டன. தற்போதைய அரசில் சஜித் அணி உறுப்பினர்கள் உள்ளனர். சுயாதீனம் என அறிவித்தவர்களும் இருக்கின்றனர். எனவே, இது மொட்டு கட்சி அரசா என்ற சந்தேகம் எழுகின்றது.

எனினும், நம்பிய மக்களை மொட்டு கட்சி கைவிடாது.” – என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...