2 27
இலங்கைசெய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் குறித்து தனது கருத்தை கூறிய அநுர

Share

தமிழ் பொது வேட்பாளர் குறித்து தனது கருத்தை கூறிய அநுர

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல் சமூக அமைப்புக்கும் தமது தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் உரிமை உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட அநுரகுமாரவிடம் தமிழ் பொது வேட்பாளர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு வேட்பாளரை நியமிப்பது அவர்களின் ஜனநாயக உரிமை ஆகும். எனினும், தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் எனும் அடிப்படையில் நாம் நமது அரசியலை நகர்த்த வேண்டிய தேவையில்லை.

குறித்த சமூகங்களுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். தெற்கிலிருந்து உருவான எந்தவொரு அரசாங்கமும் இதுவரை காலமும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாததால் பொது வேட்பாளர் என்ற விடயத்தின் ஊடாக கவனத்தை ஈர்க்க அவர்கள் தீர்மானித்திருக்கலாம்.

இருப்பினும், நாம் பிரிவினை வாத அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்த அரசியலை முன்னகர்த்த வேண்டும்.

எவ்வாறாயினும் இதன் மூலம் அவர்கள் கூற முற்படும் செய்திகள் மற்றும் கருத்துக்களை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

தமிழ் பொது வேட்பாளர் பெறும் வாக்குகளின் மூலம் தமிழ் சமூகம் எதிர்ப்பார்க்கும் விடயங்களையும் எம்மால் மதிப்பிட முடியும்” எனக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...