18 22
இலங்கைசெய்திகள்

பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

Share

பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

பொலிஸாருக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காது என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் சில நடவடிக்கைகள் தொடர்பான பழைய தவறான கலாசாரத்தை சமகால அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் திருத்த மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவி இன்று பொறுப்பேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தரப்பில் இதுவரை நடந்த தவறுகளை சரி செய்ய பொலிஸாருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் அழுத்தங்களினால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் இனிமேல் இடம்பெறாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் உரிய அதிகாரிகள் துரிதமான தீர்வுகளை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை உடைந்து அரசியல் தலையீடுகள் நிறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ மட்டத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...