WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல்! – அநுரவும் களத்தில்

Share

” புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் ,கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை களமிறக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி முடிவெடுத்துள்ளது.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பியின் பிரச்சார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடக சந்திப்பு இன்று நண்பகல் நடைபெற்றது.

இதன்போதே விஜித ஹேரத் எம்.பி. மேற்படி தகவலை வெளியிட்டார்.

” சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டோம். எனினும், ஜனாதிபதி பதவிக்காக பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்மூலம் சர்வக்கட்சி அரசமையுமா என்ற சந்தேகம் எழுகின்றது. எனினும், அந்த முயற்சியை நாம் கைவிடவில்லை. எம்மால் முடிந்த அளவில் தலையீடுகளை செய்வோம்.

அந்த முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில், ஜனாதிபதி பதவிக்கு எமது கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார். நாட்டு மக்களால் கோரப்படும் தலைமைத்துவம் அவர்தான். எம்மால் நாட்டை மீட்க முடியும். அதற்கு அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெற்றி கிடைக்கும் பட்சத்தில் சர்வக்கட்சி அரசு அமைக்கப்படும்.” என்றும் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, டளஸ் அழகப்பெரும ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இதற்கான வேட்புமனு எதிர்வரும் 19 ஆம் திகதி தாக்கல் செய்யப்படும்.

சரத் பொன்சேகா, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் களமிறக்க விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...