Sri Lanka police
இலங்கைசெய்திகள்

மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம

Share

மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம

அடுத்த ஆண்டு முதல் நாட்டில் 15000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைக்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் நாட்டில் பொலிஸ் சேவையில் 85 ஆயிரம் பொலிஸார் பணிபுரிகின்றனர். எனவும் இன்னமும் 28 ஆயிரம் பேர் பொலிஸ் சேவைக்கு தேவை.

அதன் பிரகாரம் முதற்கட்டமாக 15 ஆயிரம் பேர் இணைத்து பொலிஸ் சேவையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக்குவதற்கான அனுமதியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அரச முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இராணுவத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் பேர் கொண்ட இரு குழுக்களை பயிற்சியளித்து சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...