7 4
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு தொடருந்தில் பயணிக்கவுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு

Share

வவுனியா மற்றும் ஓமந்தை இடையே தொடருந்துபாதையில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையே இயக்கப்படும் யாழ்தேவி தொடருந்து சேவை தாமதமாகும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி ஒக்டோபர் 7 முதல், கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காலை 11.35 மணிக்கு வவுனியாவை வந்தடையும்.

பின்னர் தொடருந்து வவுனியாதொடருந்து நிலையத்தில் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் நின்று பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும். இந்த அட்டவணை 11 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

இதற்கிடையில்,யாழ்தேவி தொடருந்து எண் 4078 அதே கால கட்டத்தில் 30 நிமிடங்கள் தாமதமாக, வழக்கமான நேரத்திற்குப் பதிலாக காலை 11.00 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும்.

இந்தக்கால கட்டத்தில் முன்பதிவுகளை இரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
13 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பு: அமெரிக்கக் கடற்படையின் தலையீடு குறித்து ஈரான் கடும் எதிர்ப்பு!

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் ஹார்முஸ்...

14 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த உயர்மட்டக் குழு ஆலோசனை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும்...

17 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படும் என்ற தகவலை நிராகரித்தது எரிசக்தி அமைச்சு!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக எதிர்வரும்...

16 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் குறித்து எச்சரிக்கை: ஆயுர்வேத மருத்துவ சபை அறிக்கை!

ஆயுர்வேத மருத்துவ சபையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, போலி நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளில்...