6 4
இந்தியாசெய்திகள்

விஜய் கைது செய்யப்படுவார் : தமிழக அரசின் அறிவிப்பால் பரபரப்பு

Share

கரூர் துயர சம்பவத்தை விசாரித்து வரும் ஆணையம் பரிந்துரைத்தால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? அரசுக்கு அச்சமா?” என்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் டி.கே.எஸ். இளங்கோவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்கும் ஆணையம், “விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பரிந்துரைத்தால், அவர் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என்று கூறினார்.

மேலும், சம்பவத்தின்போது விஜயும் அதே இடத்தில் இருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே அவர் மீது முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் விளக்கினார்.

விஜய் பரப்புரைக்காக மட்டுமே வந்தவர் என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்யப்படுவது முறை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...