இலங்கை தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்றையதினம் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாளான இன்றையதினம், கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இந்நினைவேந்தல் நிகழ்வும் அதனோடு இணைந்ததாக, தமிழர் தாயகத்தில் செயலுருப்பெறும் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிரான அடையாள எதிர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்வில், மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், உள்ளூராட்சி மன்றங்களின் மேனாள் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews
Leave a comment