world 7
அரசியல்இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி இளைஞர் விவகாரம்: பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட முக்கிய தகவல்

Share

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாட்டிற்கும் நாட்டில் ஒருபோதும் இடமளிக்க முடியாது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைப்பாட்டை விளக்கிய அமைச்சர், விடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஊக்குவிக்கும் அல்லது அதற்குப் புத்துயிர் அளிக்கும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளதாக சபையில் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த தங்களது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்குமான உரிமை இங்குள்ள மக்களுக்கு முழுமையாகக் காணப்படுகிறது என்பதை அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் குறித்தும் அமைச்சர் சபையில் பிரஸ்தாபித்தார். இவ்விடயம் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருடன் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞன் விவகாரத்தில் சட்ட ரீதியாக எடுக்கக்கூடிய ஒரு சாதகமான தீர்மானம் எட்டப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...