tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

Share

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு அவர் கோரியுள்ளார்.

புதிய நிர்வாகக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாகக்குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, புதிய இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்துள்ளதாக குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...