tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

Share

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு அவர் கோரியுள்ளார்.

புதிய நிர்வாகக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாகக்குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, புதிய இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்துள்ளதாக குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 87
உலகம்செய்திகள்

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அதிரடி மாற்றம்!

பாப் இசையின் மன்னர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மைக்கேல்’ (Michael) திரைப்படம்,...

world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...