111009367 cb2438e5 ab92 40cb 8a0f c7a01d27941bddd
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரு வயது குழந்தை கொரோனாவுக்கு பலி

Share

தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாத ஆண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் இன்றைய தினமே தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலை அதிபருக்கும் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து பாடசாலை இன்று தொடக்கம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என பொது சுகாதாரப் பரிசோதகர் ஜீவந்த பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிபருடனும், மாணவர்களுடனும் தொடர்புகளைப் பேணியோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...