gover
செய்திகள்அரசியல்இலங்கை

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு

Share

அரச ஊழியர்களுக்கும் இம்மாதம் முதல் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

இலங்கையில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 450 அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

6 லட்சத்து 66 ஆயிரத்து 480 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும். சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகமாக 1000 ரூபா வழங்கப்படும். அவர்கள் தற்போது 3 ஆயிரத்து 500 ரூபாவை மாதாந்தம் பெறுகின்றனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் மாதாந்தம் 15 கிலோ கோதுமைமா மானிய நிலையில் வழங்கப்படும். ஒரு கிலோவுக்கு 40 ரூபா குறைக்கப்பட்டு, கிலோ 80 ரூபா வீதம் வழங்கப்படும்.

புதிதாக எந்த வரியையும் அறவிடமாட்டோம்.” – என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...