maithripala sirisena
இலங்கைஅரசியல்செய்திகள்

19 ஐ தேடியோடும் மைத்திரி!

Share

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி, குறைப்பாடுகளை சரி செய்து, கொண்டு 19 ஐ நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

மாத்தளை கிரான்ட் மவுண்ட் ஹோட்டலில் இன்று (04) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனிக் கட்சி ஒன்றினால், மீண்டும் அரசை அமைக்க இயலாது. இதனால், திருடர்கள், ஊழல்வாதிகள் இல்லாத புதிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் விரிவாக தேசிய கொள்கையை உருவாக்கி, புதிய பயணத்திற்கு தலைமை தாங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதேச சபை முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து இடங்களிலும் திருடர்கள் இருக்கின்றனர். பிரதேச சபைகளில் மணல் அனுமதிப்பத்திரம் மூலம் தரகு பணம் பெறுகின்றனர்.

இதேவேளை கோட்டாபய அரசாங்கம் சுசில் பிரேமஜயந்தவுக்கு, கிரிக்கெட் போட்டியில் போன்று ஒரு பந்தில் 6 ஓட்டங்களை எடுத்தது போல் செய்துள்ளது என்றும் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1760325390 G3C9lufWoAA88wr 1
உலகம்செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி காதல் வதந்தி மீண்டும் தீவிரம்: ஜப்பானியப் பிரதமரின் ‘பங்காளர்’ எனக் குறிப்பிட்ட பதிவு!

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல்...

images 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வழுக்கையாற்றுப் பாதுகாப்பு: WASPAR ஆய்வு முடிவுகளை நடைமுறைப்படுத்த வடக்கு ஆளுநர் உறுதி!

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்திய வடக்கு...

1500x900 44535787 chennai 07
உலகம்செய்திகள்

ஐரோப்பிய விதிகளை மீறிய எலான் மஸ்கின் எக்ஸ் தளத்திற்கு ரூ. 4,140 கோடி அபராதம்!

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) வலைத்தளம், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய...

tamilnadu 4
இந்தியாஇலங்கைசெய்திகள்

டித்வா புயல் நிவாரணம்: தமிழக அரசு சார்பில் 950 தொன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக...