tamilni 323 scaled
இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் குற்றச்சாட்டு

Share

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் குற்றச்சாட்டு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் வற் வரி ஏய்ப்பு செய்ததற்காக குறைவான விலைப்பட்டியல் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழு, விசாரணையை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்கத்தின் கணக்காய்வு அறிக்கைகளை கோபா குழு ஆய்வு செய்ததாக, அதன் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதன்போது வற் வரியை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக நிலக்கரி இறக்குமதிகள் குறைவான விலைப்பட்டியல் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாட்டில் ஏராளமான நிர்வாக குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வரி ஏய்ப்பின் அடிப்படையில், 187 மில்லியன் ரூபா குறைந்த கட்டணமாக அறவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின்படி, கிழக்கு மாகாணத்தில் நீர் அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றினால் நடத்தப்படும் களஞ்சியத்துக்கு போலியான உள்ளூர் தகவல்கள் தயாரிக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு பெரும் தொகை நிதி கிடைக்கச்செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தனியார் நிறுவனம், 5,139,621 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கையிருப்புக்களை களஞ்சியத்தில் வைத்திருந்தது.

எனினும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் மூலம் 6,350,364 அமெரிக்க டொலர்கள் கையிருப்புகள் மாத்திரமே காட்டப்பட்டுள்ளன.

இதனால் குறித்த நிறுவனத்திற்கு மேலதிகமாக 1,210,743 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக லசந்த அழகியவன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...