அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல்!

Wijeyadasa Rajapakshe

அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியிட்டார்.

பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சர்வக்கட்சி அரசு அமைவதற்கு வழிவிட்டே பதவி விலகவுள்ளனர்.

தம்மிக்க பெரேரா, பந்துல உட்பட 5 அமைச்சர்கள் ஏற்கனவே பதவி விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version